சனங்களின் கதை ஆவணப் பட வெளியீடு விழா - டான் பாஸ்கோ அரங்கில் 29 - 09 - 2010 .இதில் இயக்குனர் ஜனநாதன் வெளியிட குணங்குடி ஹனிபா பெற்றுகொண்டார். இதில் நிழல். திருநாவுக்கரசு, புனிதபாண்டியன் , RR . சீனிவாசன் , ஜவஹார் உள்லாஹ் , மற்றும் உமர் , இளம்பரிதி முதலியோர் கலந்துகொண்டனர்.
முதல் படமான இயற்கையிலேயே தன்னால் வித்தியாசமான படங்களை அளிக்கமுடியுமென மக்களை திரும்பிப் பார்க்கவைத்தஈ, பேராண்மை என்று தொடர்ந்து நல்ல படங்களை தந்துவரும் இயக்குனர் SP.ஜனநாதன் அவர்களுடன் ஈழநேசன் வாசகர்களுக்கான பிரத்தியேக நேர்காணல்.
2007ம் ஆண்டு உலகாயுதா என்ற அமைப்பு ஆக்கபூர்வமான குறிக்கோளுடன் சமூக முன்னேற்றங்களை முதன்மைப்படுத்தி தொடங்கப்பட்டது. தமிழ் சினிமாவிற்கான முதல் செயல்பாடாக கடந்த 2007 ஃபிப்ரவரி மாதம் பைசெல் நிறுவனத்துடன் இணைந்து 'இன்றைய சினிமா' என்ற சினிமா தொழில் நுட்பக் கண்காட்சியை சென்னை வர்த்தக வளாகத்தில் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக, பேசும் படம் வெளிவந்து 75 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி 75 கலைஞர்களுக்குத் தங்கப் பதக்கம் வழங்கி கவுரவித்தது.
பேராண்மை - தமிழில் இப்படி ஒரு படமா!!!!! மூன்றாவது முறையாக அசத்துகிறார் 'தோழர்' ஜனநாதன். மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. நம் நாட்டின் சாதி அவலத்தையும், உள்நாட்டு பிரச்சனையில் வெளிநாடுகளின் கூலிப்படை சதிகளையும், பெண்களின் சக்தியையும், திரைப்படத்தில் பேசமுடிகிற ஒரு இயக்குனர் நம்மிடம் இருக்கிறார் என்பது மிகுந்து ஆச்சர்யம்.
பொதுவாக சினிமா என்பது மக்களுக்கானது என்றாலும் சீரியஸ் சினிமா, பாப்புலர் சினிமா என்ற பிரிவுகளிலேயே சினிமாக்காரர்கள் முடங்கிப் போய் விட்டனர் என்ற விவாதங்கள் உள்ளன. எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல், சினிமாவை கற்று, சீரியஸான கருத்துகளை தம்முடைய படங்களில் சொல்லி வெகுஜன சினிமாவில் வெற்றிப் பெற்றவர். வெற்றிக்குப் பின்னால் எல்லோரும் செல்வார்கள் என்ற பேச்சுகள் இருந்தாலும் வெற்றியின் சூத்திரமும், சினிமா பற்றிய அறிதல்களும் இன்றும் மர்மங்களாகவே உள்ளன. இதைப் போல் பல சந்தேகங்களுடனும், கேள்விகளுடனும் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனை புதிய புத்தகம் பேசுது இதழுக்காக சந்தித்தோம். அந்த சந்திப்பில் நடந்த நேர்காணலின் சில பகுதிகள்…… – முத்தையா வெள்ளையன்