முதல் படமான இயற்கையிலேயே தன்னால் வித்தியாசமான படங்களை அளிக்கமுடியுமென மக்களை திரும்பிப் பார்க்கவைத்தஈ, பேராண்மை என்று தொடர்ந்து நல்ல படங்களை தந்துவரும் இயக்குனர் SP.ஜனநாதன் அவர்களுடன் ஈழநேசன் வாசகர்களுக்கான பிரத்தியேக நேர்காணல்.
2007ம் ஆண்டு உலகாயுதா என்ற அமைப்பு ஆக்கபூர்வமான குறிக்கோளுடன் சமூக முன்னேற்றங்களை முதன்மைப்படுத்தி தொடங்கப்பட்டது. தமிழ் சினிமாவிற்கான முதல் செயல்பாடாக கடந்த 2007 ஃபிப்ரவரி மாதம் பைசெல் நிறுவனத்துடன் இணைந்து 'இன்றைய சினிமா' என்ற சினிமா தொழில் நுட்பக் கண்காட்சியை சென்னை வர்த்தக வளாகத்தில் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக, பேசும் படம் வெளிவந்து 75 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி 75 கலைஞர்களுக்குத் தங்கப் பதக்கம் வழங்கி கவுரவித்தது.