
பொதுவாக சினிமா என்பது மக்களுக்கானது என்றாலும் சீரியஸ் சினிமா, பாப்புலர் சினிமா என்ற பிரிவுகளிலேயே சினிமாக்காரர்கள் முடங்கிப் போய் விட்டனர் என்ற விவாதங்கள் உள்ளன. எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல், சினிமாவை கற்று, சீரியஸான கருத்துகளை தம்முடைய படங்களில் சொல்லி வெகுஜன சினிமாவில் வெற்றிப் பெற்றவர். வெற்றிக்குப் பின்னால் எல்லோரும் செல்வார்கள் என்ற பேச்சுகள் இருந்தாலும் வெற்றியின் சூத்திரமும், சினிமா பற்றிய அறிதல்களும் இன்றும் மர்மங்களாகவே உள்ளன. இதைப் போல் பல சந்தேகங்களுடனும், கேள்விகளுடனும் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனை புதிய புத்தகம் பேசுது இதழுக்காக சந்தித்தோம். அந்த சந்திப்பில் நடந்த நேர்காணலின் சில பகுதிகள்……
– முத்தையா வெள்ளையன்